உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பெட்ரோலினை கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.