மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 8 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி ஆஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது அருட்தந்தையர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *