கன்சர்வேட்டிவ் எம்.பி., பாலியல் பலாத்கார வழக்கில் கைது

பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பெயர் குறிப்பிட விரும்பாத கன்சர்வேட்டிவ் எம்.பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2002 மற்றும் 2009 க்கு இடைப்பட்ட காலத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டாம் என்று தலைமைக் கொறடாவால் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.

பதவியை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தை போன்ற குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *