
உலக வங்கி இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த நிதியை பெற்றோலியக் கொள்வனவுகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.