போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது

உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் புதிய திட்டத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

படையெடுப்பின் போது ரஷ்யப் படைகள் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்துதல், சரிபார்த்தல் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெறும் என அறிவித்துள்ளது.

போர்க் குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செயற்கைக்கோள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் ஆய்வு செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *