மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் மோட்டார் சைக்கிள்களின் பின்னால் அமர்ந்து சென்ற மூவரும் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சுன்னாகம், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17, 23 மற்றும் 25 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *