மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, டான் பிரியசாத் உள்ளிட்ட பலர் கைது !

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 07 உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் மற்றும் மாநகரை சபை ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *