வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை

வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக 50 கிலோ கிராம் எடைக்கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பன தங்களது தொழிற்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பகங்களில் தயாரிக்கப்படும் பாண் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *