தீக்கிரையாக்கப்பட்ட வீட்டில் 34 பவுண் நகைகள் கொள்ளை

கண்டி, மே 18

கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டுக்கு தீயிடப்பட்ட நிலையில் சுமார் 34  பவுண் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக அவரின் மனைவி பொலிஸில் இன்று (18) முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டியில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம“ கடந்த 9 ஆம் திகதி தாக்கப்பட்டதையடுத்து கண்டி போகம்பறைப் பிரதேசத்திலுள்ள கண்டி மாநகர சபை உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீடும் தாக்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து மேற்படி வீட்டிலிருந்த 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் 8 லட்ச ரூபா ரொக்கப் பணம் உட்பட மேலும் பெறுமதியான பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அவர் மனைவி கே.ஜீ ரேணுகா தர்மவங்ச என்பவரால் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *