
கொழும்பு, மே 18
மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான சம்பவங்கள் தொடர்பில் 883 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில், 412 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 365 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ராஜபக்ஷ ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை தாக்கி உடைத்ததில் வன்முறை வெடித்தது.
பின்னர் அந்தக் குழுவினர் காலி முகத்திடலுக்குச் சென்று, அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அமைக்கப்பட்டிருந்த எதிர்பார்களின் கூடாரங்களை தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவானதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து தாக்கப்பட்டதோடு, பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.