வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஏ-9 வீதியில் 1915 வது நாளாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்றுவரும் கொட்டகைக்கு முன்பாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், ஆர்ப்பாட்டமும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவினர்களுக்காகவும் உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்காகவும் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.