
கொழும்பு,மே 18
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 13ஆம் ஆண்டு நினைவு நாளான மே 18 புதன்கிழமை பிரான்ஸ் நாட்டில் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வும், கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
தமிழின அழிப்பு நினைவுநாளான இன்று பிரான்ஸ் நாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இம்பெற்றதுடன் கடந்த யுத்தத்தில் 70,000 மக்கள் கொல்லப்பட்டதற்கும், 146679 பேர் காணாமலாக்கப்பட்டதற்கும் நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
குறித்த பேரணி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் பிரான்ஸ் நாட்டின் place De la RepubLique நகரில் ஆரம்பித்து மாலை 6 மணியளவில் place De la baStille நகரில் முடிவடைந்தது.
குறித்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டு மக்கள், மற்றும் புலம்பெயர் பிரான்ஸ் தமிழ் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.