
கொழும்பு,மே 18
நாட்டில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இராணுவத்தின் 396 அதிகாரிகள் அடுத்த நிலைக்கு பதவிய உயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், 8 ஆயிரத்து 110 இராணுவ வீரர்களும் அடுத்த நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, விமானப்படை அதிகாரிகள் 450 பேர் அடுத்த நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளன.
விமானப்படை தளபதி எயார் மார்ச்ல் சுதர்சன பத்திரனவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், 3 ஆயிரத்து 361 விமானப்படை விரர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கபட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலி உள்ளிட்ட பல நகரங்களில் புதன்கிழமை யுத்த நிறைவு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.