இன்று மாலை காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவு அனுஷ்டிப்பு

கொழும்பு,மே 18

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதன்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களையும் தாண்டி கொழும்பிலும் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்ட களத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்றுமுதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

செவ்வாய்க்கிழமை இரவு முள்ளிவாய்க்கால் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆர்ப்பாட்ட காரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் காலிமுகத்திடல் பகுதியில் காலைவேளை பொதுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை சற்றுமுன் காலிமுகத்திடல் பகுதியில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவுகூறுதல் எனும் தொனிப்பொருளில் நினைவேந்தல் பேரணி ஆரம்பமாகி ஜனாதிபதி செயலகம் முன்னால் நிறைவடைந்து அங்கு நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *