யாழ். வண்ணார்பண்ணை பகுதியில் தென்னை முறிந்து விழுந்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம்,மே 18

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த தென்னை மரத்தில் சிக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்று வீசி வருகிறது.

இந்நிலையில் யாழ். வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நின்றிருந்த தென்னை மரம் வீசிய பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *