நாட்டில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை – ஜனாதிபதியின் தேசிய இராணுவ வீரர்கள் தின செய்தி

சமாதானம் மலர்ந்த தாய்நாட்டில் கடும்போக்குவாதம் அல்லது இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் பல்வேறு சவால்கள் எழுந்தபோதும் தேசப்பற்றாளர்களாக இராணுவ வீரர்கள் முன்னோடிகளாக செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள சவால்கள் தொடர்பாக கவனமாகவும் விழிப்புடனும் ஆராய்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு வரலாற்றின் ஊடாக இராணுவ வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார, அரசியல் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்க உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு குழுக்கள் முயற்சிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அந்த முயற்சியை ஒன்றிணைந்து தோற்கடிப்பதன் ஊடாகவே வீரமிக்க இராணுவ வீர்கள் நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்பை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *