ஐ.பி.எல்.: டி கொக்கின் அதிரடி- லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி திரில் வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 66ஆவது லீக் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவுசெய்தது.

மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி சார்பில், குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காது 140 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவுசெய்தது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 50 ஓட்டங்களையும் நிதிஷ் ரணா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணியின் பந்துவீச்சில், மோஷின் கான் மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கிருஸ்ணப்பா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 70 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *