சலுகை விலையில் யாருக்கும் எரிபொருள் வழங்கவில்லை: எரிபொருள் அமைச்சர்

கொழும்பு, மே 19

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வெளியாகிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாமென மக்களிடம் நேற்று (18) கோரிக்கை விடுத்திருந்த போதிலும் மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், எவ்வாறாயினும், இன்றைய தினமும் எரிபொருளை வழங்க முடியாதெனவும், நேற்றிரவு நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதால் இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ள முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *