இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்காக கனடா நாடாளுமன்றம் ஒரு நாளை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஆக்குவதற்கான பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி புதன்கிழமை இந்த பிரேரணையை முன்வைத்திருந்தார்.

Scarborough-Rouge Park இன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறானதொரு நாளை உருவாக்கிய உலகின் முதல் தேசிய நாடாளுமன்றம் கனடாவாகும் என தெரிவித்துள்ளார்.