தென்னைமரம் முறிந்து வீழ்ந்து முதியவர் உயிரிழப்பு!

வீட்டின் முன்நின்ற தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் ​நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்த முதியவர் மீது பலத்த காற்று வீசியதிலே தென்னை மரம் வீழ்ந்தது. முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *