நாடாளுமன்றுக்கு முன் போராட்டம் நடத்த தடை விதிக்குமாறு கோரிக்கை – நீதிமன்றம் நிராகரிப்பு!

நாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நடத்தவுள்ள போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு வெலிக்கடை பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் செல்வதற்கான சந்தர்ப்பம் தடைப்படவுள்ளதாகவும் போராட்டத்தை நடத்துவதன் ஊடாக அவர்களின் சிறப்புரிமைகள் மீறப்படலாம் என்பதால், போராட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

பொலிஸாரின் கோரிக்கைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.​

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் பொலிஸாரின் அதிகாரங்களுக்கு அமைய செயற்படுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *