
சர்வதேச கணித ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகிய கிளிநொச்சி மாணவன்!
63 வது சர்வதேச கணித ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் பாடசாலை சமூகத்தால் கெளரவிக்கப்பட்டார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தில் குறித்த போட்டி நடைபெற உள்ள நிலையில் இலங்கையிலிருந்து ஆறு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.அவர்களில் ஐந்து சிங்கள மாணவர்களும் தெய்வேந்திரம் திருக்குமரன் மாத்திரமே தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.