திருகோணமலையில் ஆயுத வேட்டை தோல்வி

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவின் விநாயகபுரம் பகுதியில் உள்ள வயல் பகுதியிலுள்ள மரமொன்றின்கீழ் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இன்று வியாழக்கிழமை (19) அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அங்கிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் இன்று அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் அகழ்வுப்பணி இடம்பெற்ற இடத்திற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இப் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித ஆயுதங்களும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *