
கொழும்பு, மே 19
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் ஒன்றின் விலை ரூ.30 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை ரூ.180 ஆகும்.
ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளமை காரணாமாக இவ்வாறு பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.