வட்டுக்கோட்டை தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

வட்டுக்கோட்டை தொகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் 5 மணியளவில் தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் முகமாக முன்னாள் போராளி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனை அடுத்து முள்ளிவாய்க்கால் தொடர்பான நினைவுப் பகிர்வும் இடம்பெற்றதோடு வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக் கட்சி அலுவலகத்தின் முன்பாக தெல்லிப்பழை அராலி பிரதான வீதியில் பொதுமக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வலி மேற்கு, வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக் கட்சி இளைஞர் அணியினர் , பேராசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *