கிளிநொச்சியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கணவன்,மனைவி வைத்தியசாலையில்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட
புளியம்பொக்கணை பகுதியில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் மற்றும் உலக்கையால் தாக்கி கொள்ளையிட்டுள்ளனர்.
காயமடைந்த கணவன் மனைவி இருவரும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.