
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளைமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 180 ரூபாவாக விற்பனையாகவுள்ளது.
அத்துடன் ஏனைய அனைத்து பேக்கரி பொருள்களின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பாலேயே இவ்வாறு பேக்கரி பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதால தெரிவிக்கப்படுகிறது.