அநுராதபுரத்தில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் மிளகாய்த்தூள் தூள் வீசி கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பகுதியில் இன்று (19) முற்பகலில் நகை வாங்குபவர் போல் பாசாங்கு செய்து, நகைக்கடைக்குள் பார்வையிட்டு கொண்டிருக்கும்போது கடையில் இருப்பவர்கள் மீது திடீரென மிளகாய்த்தூளை வீசி நகையை எடுத்துச் செல்ல நபரொருவர் முயற்சித்துள்ளார்.
எவ்வாறாயினும், அருகாமையில் இருந்தவர்கள் விடயத்தை அறிந்து திருடனை துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்போது கொள்ளையிடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.