
பொதுமக்கள் உணவுக்காக கஸ்டப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் உணவகம் செயற்படுவது பொருத்தமானது அல்ல. எனவே அந்த உணவகத்தை மூடி விடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
போரில் இறந்த படையினருக்கு மரியாதை செலுத்துகின்ற அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்தவேண்டும்.
அதேநேரம், தவறான வழியில் சென்றாலும் பிரபாகரனின் கீழ் செயற்பட்டு இறந்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக தெரிவித்தார்.
மேலும், தாம் அரசியல் வாழ்க்கையில் அதிகமாக விமர்சித்த ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதமராக பதவியேற்றமை யை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் சர்வதேசத்தில் நற்பெயரைக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தின் 225 பேர் செய்ய முடியாத காரியமான சர்வதேச செல்வாக்கை, அவர் பெற்றிருக்கிறார்.
எனவே அவருக்கு நாடாளுமன்றின் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இதேவேளை நாட்டில் இன்று சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை.
நாட்டில், இன்று பொதுமக்கள் உணவுக்காக கஸ்டப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் உணவகம் செயற்படுவது பொருத்தமானது அல்ல.
எனவே அந்த உணவகத்தை மூடி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூறவேண்டும் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.