
இம்முறை கிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 28,882 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் புள்ளநாயகம் தெரிவித்தார்.
இவற்றுள் தமிழ் மொழி மூலம் 22,805 பரீட்சார்த்திகளும் சிங்கள மொழி மூலம் 6077 பரீட்சாத்திகளும் அடங்குவர்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 53 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் 407 பரீட்சை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதரண தரப்பரீட்சையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் கொவிட் பாதிப்பேற்பட்ட மாணவர்களுக்கு பரீட்சைகளை எழுத தேவையான ஏற்பாடுகள் உரிய பரீட்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் 107 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.