முன்னாள் பிரதமர் தொடர்பில் சமல் ராஜபக்ஷவின் கருத்து

கொழும்பு,மே 19

மஹிந்த ராஜபக்க்ஷ தனது இரண்டு தடவை ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடைந்த  நிலையில் ஓய்வு பெற்றிருந்தால் நன்றாக  இருந்திருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்க்ஷ வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே சமல் ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்க்ஷ சுமார் 50 வருடங்களாக நாட்டுக்காக பெரும் சேவையை ஆற்றியுள்ளார்.

ராஜபக்ஷக்கள் சுமார் 90 வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியதாகவும், அவர்களின் நேர்மையான அரசியலின் காரணமாக ராஜபக்ஷக்கள் இன்றும் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *