வன்முறை சம்பவங்களை பொலிஸார் வேடிக்கை பார்த்தார்கள்: சமல் ராஜபக்க்ஷ

கொழும்பு,மே 19

கொழும்பு, காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்தார்கள் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ வியாழக்கிழமை சபையில் வலியுறுத்தினார்.

மேலும் பொலிஸார், பொறுப்பிலிருந்து விலகியமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தற்போதைய போராட்டத்தின் பின்னணியில் முன்னிலை சோசலிச கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியினரும் உள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

வாக்குகளினால் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் கலவரத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *