நாளை முதல் மூடப்படுகின்றன பாடசாலைகள் – அறிவிப்பு வெளியானது

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சினால் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான முதல் தவணையானது இன்று முடிவடைவதுடன், அடுத்த மாதம் ஆறாம் திகதி மீள ஆரம்பிக்கவுள்ளது.

இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *