நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அவரது கணவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் குறித்த இருவரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளது.