சட்டவிரோதமாக கடல் மார்க்கம் மூலமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 12வயது சிறுவன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 நபர்களை மட்டக்களப்பு களுவாஞ்சிங்குடி கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மீட்டு திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (18) இடம் பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடற் படையினரை கண்ட சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி சென்றவர்கள் படகை வேகமாக ஓட்டியதன் காரணமாக இயந்திரம் சூடாகி நீரிழ் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், கடற் படையினர் மீட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
இதில் பயணித்த 19 நபர்களில் 12 வயது சிறுவன் உள்ளடங்கலாக பெண் ஒருவர், கடத்தல்காரர் இருவர் என மொத்தமாக 19 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிலாவெளி பகுதியை சேர்ந்த இருவரும் இதில் அடங்குவர்
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை துறைமுகப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

