
கொழும்பு,மே 19
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மாலை 6.30 க்குப் பின்னர் மின் விநியோகத் தடையினை அமல்படுத்தாதிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இதற்கமைய மே 22 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை மாலை 6.30 க்குப் பின்னர் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தாதிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்னுற்பத்திக்கு அவசியமான நீர் மற்றும் எரிபொருளை போதுமான அளவில் பெற்றுக் கொடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.