சமன்லால் பெர்னாண்டோ, டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

மொறட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *