யாழ்ப்பாணம்,மே 19
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வியாழக்கிழமை இரவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாகம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கொக்குவில் பகுதியில் உள்ள மஞ்சள் கடவையை கடக்க முற்பட்ட ஒருவரை மோதியுள்ளது.
மோதுண்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
