இன்றும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

கொழும்பு,மே 19

கொரோனா தொற்று உறுதியான மேலும் 15 பேர் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,720ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 279 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *