
கொழும்பு,மே 19
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையில் நேற்றிரவு (18) 7.30 மணியளவில் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 19 பேரும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் நாளை 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(அப்துல்சலாம் யாசீம்)