கல்முனையில் ஒரு காலிமுகத்திடல் வேண்டும்!
பாறுக் நதீர்
அதிகளவான மக்கள் தொகை மிகப் பெரிய நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட பிரதேச செயலகங்கள் பல இன்று ஒன்றுக்கு மேற்பட்ட செயலகங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. இதனால் அவ்வாறு பிரிக்கப்படும் பிரதேச இடப்ரப்பில் வாழுகின்ற மக்களுக்கு ஏராளமான நிதி மற்றும் அபிவிருத்தி சார் நன்மைகள் கிடைக்கப் பெறுவது கண்கூடு. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச செயலகம் சம்மாந்துறை நாவிதன்வெளி இறக்காமம் எனவும் நிந்தவூர் பிரதேச செயலகம் காரைதீவு நிந்தவூர் எனவும் ஏற்கனவே பிரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராம சேவகர்17+29+29 பிரிவுகள் மொத்தமாக கொண்டு கல்முனை பிரதேச செயலகம் இயங்கிவந்தது அதன் தென்பகுதி மக்கள் தமக்காக ஒரு பிரதேச செயலகம் வேண்டும் என கோரிக்கை வைத்தபோது 17 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டுள்ளது அதேபோன்ற கோரிக்கையை கல்முனையின் வடபகுதியில் 29 கிராமசேவகர் பிரிவுகளில் வாழுகின்ற மக்கள் தமக்கும் ஒரு பிரதேச செயலகம் வேண்டும் என்று கோரி நின்றபோது இந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கை மிக நீண்டகாலமாக நிராகரிக்கப்பட்டு வருகின்றது… இனத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி மக்களின் உரிமைகளை மறுப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல அண்மையில் இனத்தின் அடிப்படையில் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரிக்கப்பட்ட போது தமிழ் மக்களும் சேர்ந்துதான் அதற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிக்காட்டி இருந்தார்கள். அவ்வாறு இருக்கையில் நம்முடையது மட்டும் இரத்தம் மற்றவர்கள் உடையது தக்காளி சட்னி என்ற போக்கில் கல்முனையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் கோரிக்கை நிராகரிப்பது எந்த விதத்திலும் அர்த்தம் உடையதாக அமையாது..
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தில் 29 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன அதே எண்ணிக்கையான கிராம சேவகர் பிரிவுகளோடு கல்முனை வடக்கு (தமிழ்)பிரதேச செயலகமும் இயங்கி வருகின்றது. மேலும் இரு செயல்கங்களுக்கும் மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியும் சமனானதகவே இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் பிரதேச செயலகத்தில் காணப்படும் வசதிகள் வாய்ப்புகளிலும் மிக மிக குறைவாகவே வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தில் காணப்படுகின்ற சமுர்த்தி கிளை திட்டமிடல் கிளை நிர்வாக கிளை காணிப் பிரிவுகளுக்கும் 20க்கும் அதிகமான குளிரூட்டி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு குளிரூட்டல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இந்தப் முஸ்லீம் பிரதேச செயலகத்திற்கு 50 மீட்டருக்கு அப்பால் உள்ள தமிழ் பிரதேச செயலகத்தின் இந்த கிளைகள் எவற்றிக்கும் இந்த வசதிகள எதுவும்செய்து கொடுக்கப்படவில்லை.. அத்தோடு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவில் அனைத்து பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு குளிரூட்டல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழ் பிரதேச செயலகத்தில் செயலகத்தில் பதவி நிலையை உத்தியோகத்தர்கள் இருவருக்கு மட்டுமே இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. (இதனை உண்மை என நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றால் இரண்டு காரியங்களுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிடுங்கள் ,)
ஒரே நியமணத்தையுடைய அரச உத்தியோகத்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தின் அடிப்படையில் கொடுக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை மறுப்பது எந்த வகையில் நியாயமானது ஃஃ? மறுபக்கமாக இனத்தை பார்த்து வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்காது தடை செய்து இருப்பீர்கள் எனின் ஏன் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் உத்தியோகத்தர்களை உங்கள் காரியங்களில் இடமில்லை என்று சொல்லி அங்கு கடமைக்கு செல்ல வழி விட்டீர்கள்???
நீங்கள் இனத்தின் அடிப்படையில் மறுத்து உரிமைகளை இன்று உங்கள் இனத்தைச் சார்ந்தவர்களும் அல்லவா அங்கு அனுபவிக்க அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு கடமை புரியும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் எந்தவிதமான பாகுபாடும் அவர்களால் பார்க்க படவில்லையே அதனால் அங்கு கடமை செய்யும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்தில் நிர்வாகிகள் அரசியல்வாதியின் துணையோடு தமிழ் பிரிவுக்கு இழைக்கப்படும் அநீதிகள் கண்டு தங்களுக்குள்ளேயே கூணிக் கூறிக்கொள்கின்றனர்..
.. வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட கூடாது என்று தனது சொந்த அரசியல் நலனுக்காக மட்டும் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என்று 19 இற்க்கும்
20இற்க்கும
100மீட்டர் ரோட்டு கொந்தராத்திற்கு சமுதாயத்தின் நலன்களை எல்லாம் காட்டிக்கொடுத்து கை உயர்த்தி தனது பாராளுமன்ற கதிரையை தொடர்ந்து தக்கவைப்பதற்க்கும் மக்களை மடையாக்குவதற்க்கும் பாவிக்கும் சுலோகமே”தரமுயர்த்த கூடாது’என்பதாகும்
நமது சகோதர இனத்தையும் அவர்களின் நலன்களை நசுக்க முயற்சிப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சகோதரர்களே முன்னூறுக்கும் அதிகமான உத்தியோகத்தர்களை கொண்டு இயங்குகின்ற வடக்கு பிரதேச செயலகம் இன்று வரை தனது சகல நடவடிக்கைகளுக்கும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளரின் அனுமதிக்காகவும் கல்முனை முஸ்லிம் பிரதேசத்தில் கடமையாற்றுகின்ற கணக்காளரையும் எதிர்பார்த்தே நிற்க வேண்டி உள்ளதால் அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளை செய்வதில் மிக மிக காலதாமதம் ஏற்படுகிறது அதேபோன்று அந்த அலுவலகத்திற்கு தேவையானவற்றை செய்வதற்கும் இந்த முஸ்லிம் பிரதேச செயலாளரின் மற்றும் கணக்காளரின் நடவடிக்கைக்காக காத்திருக்க வேண்டி இருக்கின்றது. (சிறிய குண்டுசை பெறுவதற்கும் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது) உயர் அதிகாரிகளை பிரதேச அரசியல்வாதி தனது கைப்பாவைகளாக வைத்திருப்பதனால் இவர்கள் வடக்கு பிரதேசத்திற்கு உரிய நேரத்தில் ஒதுக்கப்பட வேண்டிய நிதியும் செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதியும் மறைமுகமாக தாமதப்படுகின்றன
பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க முஸ்லிம்கள் புசிக்க மாட்டார்கள் என்பர் ஆனால் இன்று 50 மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் வடக்கு பிரதேசத்தின் உத்தியோகத்தர்களும் அதன் பயனாளிகளும் நன்மைகளை பெறுவதிலிருந்து தாமதிக்க/தடுக்கபட்ட நிலையில் தாங்கள்(முஸ்லீம்கள்)மட்டுமே அரசினால் வழங்கப்படுகின்ற வசதிகளை முந்திக் கொண்டு அனுபவித்து மகிழ்கின்றோம் இது நியாயமானதா?
உங்கள் மனச்சாட்சியை தொட்டுக் கூறுங்கள் கல்முனை வடக்குப் பகுதியில் வாழுகின்ற தமிழ் மக்களை விட தெற்குப் பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் ஏழைகளா? முதலில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியவர்களா?
யார் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவர்கள்??? தமிழ் மக்கள் எங்களுக்கு முன்னுரிமை தாருங்கள் என்று ஒருபோதும் கேட்கவில்லை நாங்கள் சுதந்திரமாக இயங்க எங்களது உரிமையை தாருங்கள் அதனூடாக நாங்கள் எங்களை அபிவிருத்தி செய்து கொள்கின்றோம்.
என்றுதான் 30 வருட காலமாக கோரி நிற்கிறார்கள்.
உங்களுடையதில் எங்களுக்கு எந்த பங்கும் வேண்டாம் ஆனால் எமக்கு அரசினால் வழங்கப்படவேண்டியவைகளை தடுக்காதீர்கள் அவற்றை எங்களுக்கு தந்து விடுங்கள் என்று கேட்கின்றார்கள் அவர்களது கேள்வி நியாயமற்றதா ?
இன்று காலிமுகத்திடலில் இளைஞர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகளாக ஒன்றிணைந்து உள்ளனர் அவ்வாறே கல்முனையில் வாழுகின்ற அனைத்து இளைஞர்களும் இலங்கை பிரஜைகளாக ஒன்றிணைந்து எமது சகோதர இனம் பெற வேண்டிய உரிமைகளை நாமே பெற்றுக் கொடுக்க நம்மிடையே கைகோர்ப்போம் கல் முனையிலும் ஒரு காலிமுகத்திடல் உருவாக வேண்டும் அது தமிழ் மக்களின் வாழ்க்கையில் அவர்களுடைய பிரதேச சுய ஆட்சியில் அவருடைய சுய அபிவிருத்தியில் காத்திரமான பங்கை தரம் உயர்த்தப்பட்ட பிரதேச செயலகம் ஒன்றின் மூலம் வழங்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்
.எல்லைகளை கடந்து நாம் ஒன்றிணைவோம் சொந்த வட்டாரம் பிரிபடும்போது பராமுகமாக இருந்தவர்கள் எல்லைநிர்ணயமென பூச்சுத்துகின்றனர்.
எல்லைகளின் நிர்ணயத்தை காரணங்காட்டி அவர்களுடைய உரிமையை மறுப்பது அறிவுடமையோ அறமோ அன்று.