ஜி7 அமைப்பும் இலங்கை நிவாரண முயற்சிகளிற்கு ஆதரவு

உலகின் சக்தி மிக்க ஏழு பொருளாதார வல்லரசுகளின் கூட்டணியான G7 மாநாட்டில், இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழன் அன்று ஜேர்மனியில் நடைபெற்ற கூட்டத்தின் வரைவு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

G7 நாடுகள் தங்கள் அறிக்கையில்,

இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும், சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் “ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த” வலியுறுத்தியது.

வெள்ளிக்கிழமை G7 நிதி அமைச்சர்கள் கூட்டம் முடிவதற்குள் இறுதி செய்யப்பட இருக்கும் வரைவு அறிக்கை, பாரிஸ் கிளப்பில் இல்லாத பிற பெரிய கடன் வழங்கும் நாடுகளையும் குழுவுடன் ஒருங்கிணைக்க அழைப்பு விடுத்தது மற்றும் ஒப்பிடக்கூடிய விதிமுறைகளில் கடன் நிவாரணம் வழங்க வலியுறுத்தியது.

G7 நிதித் தலைவர்கள், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குப் பெரிய கடன் வழங்குபவராக மாறியுள்ள சீனாவை, அத்தகைய நாடுகளுக்கான கடன் நிவாரணத்தில் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *