சமூக ஊடகங்கள் மூலம் வன்முறையைத் தூண்டுவோருக்கு வலைவீச்சு

காலி முகத்திடல் – மே 09, 2022 சம்பவங்களின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களும் 39 வயதுடைய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக கணினி குற்றச் சட்ட விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *