அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை!

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அவசர மற்றும் அத்தியாவசிய கடமைகளுக்காக, நிறுவன பிரதானியினால் பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கு தடை இல்லை என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிக்கல் நிலை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *