மே 24 IMF உடனான பேச்சுவார்தை நிறைவு

கொழும்பு, மே 20

மே 24 அன்று நாட்டிற்கு சாத்தியமான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுடன் பிரிட்ஜிங் நிதித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், நாடு மீண்டும் நிலைபெறும் செயற்பாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *