கடன் திட்டம் – IMF உடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் திகதி குறித்த அறிவிப்பு

<!–

கடன் திட்டம் – IMF உடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் திகதி குறித்த அறிவிப்பு – Athavan News

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் மே 24 ஆம் திகதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கேரி ரைஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்த அவர், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சரியான நேரத்தில் தீர்க்க பங்குதாரர்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றும் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *