லிட்ரோ நிறுவனத்தின் புதிய திட்டம்

45 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் இன்றைய தினம் சந்தையில் விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 80 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் நாளைய தினம் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனை குறித்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் நாளொன்றுக்கு 80 ஆயிரம் எரிவாயு கொள்கலன்களை சந்தையில் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *