ஜப்பானால் இலங்கைக்கு 1.5 மில்லியன் நிதியுதவி

இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் ஏற்படப் போகும் உணவுப் பஞ்சத்தை சமாளிக்க ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

அதற்கமைய ஜப்பான் 1.5மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி இலங்கைக்கு ஜப்பானால் வழங்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பலர் அன்றாட உணவுக்காகவும் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்காகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பான் அரசு இலங்கைக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *