முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது திட்டமிட்ட இனப்படுகொலையே!

2009ஆம் ஆண்டு இறு­திப்­போ­ரின்­போது தமி­ழர்­கள் இனப்­ப­டு­கொ­லைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­னர் என்று ஏக­ம­ன­தாக ஏற்­றுத் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யுள்­ளது கனே­டிய நாடா­ளு­மன்­றம்.

இதன்­மூ­லம் இலங்­கை­யில் இடம்­பெற்ற தமிழ் இனப்­ப­டு­கொ­லையை ஏற்று அங்­கீ­க­ரித்த உல­கின் முதல் நாடா­ளு­மன்­ற­மாகக் கனே­டிய நாடா­ளு­மன்­றம் அமைந்­துள்­ளது.

கனே­டிய நாடா­ளு­மன்­றத்­தின் நேற்­று­முன்­தின அமர்­வில் இது தொடர்­பான பிரே­ர­ணையை கனே­டிய தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹரி ஆனந்தசங்­கரி முன்­வைத்­தார். அவ­ரின் பிரே­ரணை எதிர்ப்பு இல்­லா­மல் அனைத்­துக் கட்­சி­க­ளா­லும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இதை­ய­டுத்து இலங்­கை­யில் 2009ஆம் ஆண்டு தமி­ழர்­கள் இனப்­ப­டு­கொ­லைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­னர் என்று முற்­று­ மு­ழுதுமாக ஏற்­றுக்­கொண்­டது கனடா.

இந்­தத் தீர்­மா­னம் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றப் பட்­ட­மைக்கு அனை­வ­ரும் கர­வொலி எழுப்பி வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்­த­னர்.

அத்­து­டன் ஒவ்­வொரு ஆண்­டும் மே மாதம் 18ஆம் திக­தியை தமி­ழர் இனப்­ப­டு­கொலை நினை­வேந்தல் நாள் என்­றும் கனே­டிய நாடா­ளு­மன்­றம் அறி­வித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *