ஹரின், மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

<!–

ஹரின், மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – Athavan News

அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான லக்‌ஷ்மன் கிரியல்ல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை என கட்சி முடிவெடுத்திருந்த நிலையில், கட்சிமுடிவை மீறி செயற்பட்டதாலேயே, இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *